தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாயுடன் விரைந்த போலீசார்!!!

0
நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் - வெளியான பகீர் அறிக்கை!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு சொந்தமான சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் விரைந்துள்ளனர். மேலும் மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல்:

தமிழகத்தில் பிரபல நடிகர்கள், அரசியல்வாதிகள் வீட்டிற்கு மர்ம நபர்கள் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்து விட்டது. தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருந்தனர். அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர். தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளதாக கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் தீபாவளி ரொக்கப்பரிசு?? எதிர்பார்ப்பில் மக்கள்!!

இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இவ்வாறு மிரட்டி உள்ளார். இதனை அடுத்து போலீசார் மோப்ப நோய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here