விவசாயி ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்த்து வந்த செல்ல நாயின் பெயரில் எழுதி வைத்துள்ளார். தனது மகனுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக இவ்வாறாக அவர் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மனைவிகள் மற்றும் 5 பிள்ளைகள்:
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஓம்நாராயண் வெர்மா. இவருக்கு தன்வந்தி என்றும் சம்பா பாய் என்று இரு மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரின் மீதும் ஓம்நாராயணன் மிகவும் அன்பாக தான் இருந்து வந்துள்ளார். அவரது முதல் மனைவி தன்வந்தி இவரை விட்டு தனியாக 8 ஆண்டு காலம் வாழ்ந்து வருகிறார். ஓம்நாராயணன் தனது இரண்டாவது மனைவி சம்பாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் ஜாக்கி என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஓம்நாராயணனுக்கும் அவரது மகனிற்கு எதோ கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் தனது மகன் மீது மிகுந்த மாணவருத்தத்தில் இருந்துள்ளார் ஓம்நாராயணன். இதனை அடுத்து தன்னுடைய சொத்துக்களில் ஒரு பகுதியை தான் வளர்த்து வரும் நாயின் பெயரில் எழுதி வைத்துள்ளார். அவர் எழுதியுள்ள உயிலில் இருபதாவது, “நான் நலமாக தான் உள்ளேன். என்னை எனது செல்ல நாய் மற்றும் எனது மனைவி சம்பா மட்டும் நன்றாக பார்த்துக்கொள்கின்றனர். எனது மரணத்திற்கு பிறகு நான் வளர்த்த ஜாக்கி அனாதையாகி விடக்கூடாது. இதனால் எனது சொத்தின் ஒரு பகுதியை ஜாக்கிக்கு எழுதி வைக்கிறேன். எனது மரணத்திற்கு பிறகு எனது மனைவி சம்பா மற்றும் ஜாக்கி இருவரும் தான் எனது இறுதி சடங்கினை நடத்த வேண்டும்”
விராட் கோஹ்லி டாப்!! 2020ம் ஆண்டுக்கான இறுதி ரேங்கிங் பட்டியல் – ஐசிசி வெளியீடு!!
“எனது மரணத்திற்கு பிறகு யார் ஜாக்கியை கவனித்து கொள்கிறார்களோ அவர்களே சொத்தை பயன்படுத்தி கொள்ளலாம்” இவ்வாறாக எழுதி வைத்துள்ளார். அவர் எழுதி வைத்துள்ள சொத்தின் மதிப்பு 21 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அவரது முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தெரிய வந்துள்ளது. ஊர் மக்கள் அனைவரும் ஓம்நாராயணன் மற்றும் அவரது மகனை சமாதானப்படுத்தி உள்ளனர். இருவரையும் சேர்த்தும் வைத்துள்ளனர். இதனை அடுத்து ஓம்நாராயணன் உயிலை திரும்ப பெறுவதாக உறுதி அளித்துள்ளார். இந்த வினோத மனிதரின் இந்த செயலால் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.