தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருவதை நாம் அறிவோம். இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவாரூர், தென்காசி, கோவை, தஞ்சை, திருப்பூர், தேனி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.