‘இனி அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது’ – ஜியோவின் புத்தாண்டு சலுகை!!

0

நாளை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் தங்களது பயனாளர்களுக்கு புது சலுகையை வழங்கி வருவார்கள். தற்போது அதே போல் ஜியோ நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ள்ளது. இதனால் பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

ஜியோ:

இந்தியா பணக்காரர்களும் ஒருவரான அம்பானி குழுமத்தாரின் நிறுவனம் தான் ஜியோ. ஜியோ நிறுவனம் தான் உருவான குறுகிய காலங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும் அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோநிறுவனம் என்ற பெருமையும் உண்டு. ஆரம்ப காலத்தில் இலவசமாக சிம் மற்றும் அனைத்து சலுகைகளையும் வழங்கி தனது வாடிக்கையாளர்களை சேர்த்தனர். சுமார் 1 வருட காலமாக இலசமாக டேடா மற்றும் கால் வசதிகளை வழங்கி வந்தது. இதற்காகவே பயனாளர்கள் அனைவரும் ஜியோ சிம் உபயோகப்படுத்தி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

jio
jio

தற்போது சில மாதங்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அது என்ன வென்றால் ஜியோ பயனாளர்கள் வேறொரு சிம் பயனாளர்களை தொடர்பு கொண்டால் நிமிடத்திற்கு 6 காசுகள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதனால் மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் கூட ஜியோ நிறுவனத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை குறைய வில்லை. காரணம் அந்த நிறுவனத்தின் சேவை சிறப்பாக இருந்தது.

‘குழந்தைகள் இறைச்சி சாப்பிட்டால் ஆஸ்துமா ஏற்படும்’ – அமெரிக்கா ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்!!

புதிய சலுகை:

தற்போது நாளை புத்தாண்டு என்பதால். ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஓர் சலுகையை அறிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அது என்னவென்றால் முன்பு போல் வேறு சிம் பயனாளர்களிடம் தொடர்பு கொண்டால் காசு இல்லாமல் இலவசமாக பேசலாம் என்று அறிவித்துள்ளனர்.

வரும் ஜனவரி 1 முதல் IUC அழைப்பு கட்டணத்தை ரத்து செய்துள்ளதாக TRAI அமைப்பு அறிவித்துள்ளது. இனி ஜியோ வாடிக்கையாளர்கள் தடையின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here