ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

0

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார்கள் தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

இதனால் நாட்டு மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் கடைகள் கட்டுப்பாடுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குபதிவு..!

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1.14 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 1.24 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 97,146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ.38,54,144 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here