கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களும் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தனியார் துறைகளும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது.
இலவச பரிசோதனை
கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளித்தது. இதனால் தனியார் துறையில் கொரோனா பரிசோதனைக்கு ரூ. 4500 வசூலிக்கப்பட்டது.
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி உள்ளதால் இந்த கட்டணத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நாட்டில் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறதா என உறுதி செய்ய உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |