கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அன்றைய தினமே விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் எப்போது? இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
கடைசி ஓவர் திரில்லர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற லக்னோ…, தோல்வியின் பிடியில் CSK!!
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே கடைசி கட்ட வாக்குபதிவின் போது (ஜூன் 1) விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை நடத்தலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை, தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.