அனைவரும் விரும்பும் குட்டி கண்ணன் பிறந்த தினத்தை இந்திய மக்கள் அனைவரும் ” ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி” என்று கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ணனின் பிறப்பு:
இந்தியா நாடு ஒரு ஆன்மிக பூமி என்று சொல்லப்படுகிறது, அதற்கு காரணம் மக்கள் அனைவரும் கடவுள்களுக்கு கூட பிறப்பு, வாழ்வியல் சூழல் மற்றும் இறப்பு என்று வைத்துள்ளனர். அதனை இதிகாசங்களாக மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
காக்கும் கடவுளான “ஸ்ரீ மகா விஷ்ணு” பூமியில் பிறப்பு எடுத்து மக்களுக்கு நல்வழி காட்ட “ஸ்ரீ கிருஷ்ணன்” என்று ஒரு அவதாரத்தை எடுத்துள்ளார் என்று கூறுகிறது நமது இதிகாசங்கள். அந்த கண்ணன் பிறந்த தினத்தை தான் “ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி” என்று ” கோகுலாஷ்டமி” என்றும் கொண்டாடுகிறோம்.
இதிகாசங்களின்படி, கண்ணன் கம்சமஹாராஜாவின் தங்கையான தேவகிக்கும் வாசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக பிறந்து அன்றிரவே, வாசுதேவரால் ஆயர்பாடிக்கு அழைத்து செல்லபட்டர். அங்கு, நந்ததேவர் மற்றும் யசோதாவிற்கு மகனாக வாழ்ந்து வந்தார். அந்த ஆயர்பாடி நகரில் அவன் செய்யாத குறும்புகள் இல்லை, சேட்டைகள் இல்லை, சுட்டித்தனங்கள் இல்லை ஆனாலும், சிந்தனை விதைக்கும் படங்களை மக்களுக்கு தனது எளிமையான வாழ்வியல் சூழல் மூலமாக கட்டினான்.
குட்டி கண்ணனின் பாதம்:
இந்த விழாவினை இந்தியா மக்கள் அனைவரும் விரும்பி கொண்டாடுகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர், வீட்டில் குட்டி குழந்தை உள்ளோர் இந்த பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றனர்.
இந்த பண்டிகை அன்று, வீட்டில் உள்ள குட்டி குழந்தைகளுக்கு கண்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து, அவர்களது பாதங்களில் மாவு இட்டு நடந்து வர சொல்வர். இதன் மூலமாக தங்கள் வீட்டிற்கு குட்டி கண்ணனே வந்ததாக நினைத்து மகிழ்வர்.
என்ன என்ன செய்யலாம்??
கோகுலாஷ்டமி அன்று, வீட்டில் அதிகாலை எழுந்து கண்ணனுக்கு பிடித்த அவல், வெண்ணை, சீடை இவையெல்லாம் செய்து படைக்க வேண்டும். குழந்தைகளுக்கு அதனை கொடுத்து மகிழலாம். வாழ்வில், நலம் பெற கண்ணை வணங்கி மகிழ்ச்சி அடையலாம்.