அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து எதுவும் தேவையில்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
துணை வேந்தரின் தன்னிச்சையான கடிதம்:
அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சுரப்பா தன்னிச்சையாக அகில இந்திய கவுன்சிலுக்கு, பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கடிதம் எழுதினார். இது அனைவர் மத்தியிலும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று அனைவரும் தங்களது கண்டன கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். நாளுக்கு நாள் இந்த சர்ச்சை அதிகரித்த வண்ணம் வந்தது.
சேலத்தில் உயிருடன் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் மரணம் – போலீசார் விசாரணை!!
இதனை அடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “தமிழகத்தில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று அரசு முடிவு எடுத்துள்ளது. சிறப்பு அந்தஸ்து இல்லாமலேயே பல்கலைக்கழகம் சிறப்பாக தான் செயல்பட்டு வருகின்றது”
மாணவர்களின் நலன்:
“சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதற்கு தமிழக அரசு சார்பில் சில முக்கிய காரணங்கள் கூறப்பட்டுள்ளன. முதலில், சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் கல்வி கட்டணம் அதிகரித்து விடும். அதே போல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் போய் விடும். மாணவர்களின் சேர்க்கையில் நுழைவுத்தேர்வு என்ற ஒன்று வந்துவிடும். வெளிமாநிலங்களில் உள்ள மாணவர்கள் அதிகமாக வந்து படிக்கும் சூழல் ஏற்பட்டு, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இதனால் தான் தமிழக அரசு இது குறித்து இப்படியாக முடிவினை எடுத்துள்ளது”
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
“தமிழக அரசுக்கு கட்டுப்பட்டது தான் பல்கலைக்கழகமே தவிர, பல்கலைக்கழகத்திற்கு அரசு கட்டுப்பட்டது அல்ல. அதே போல் சிறப்பு அந்தஸ்து என்ற ஒன்றிக்காக தமிழக அரசு எதையும் இழக்க தயாராக இல்லை. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.