இம்முறை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
நாளை தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
விரைவில் சிம்பு – த்ரிஷா திருமணம்?? சந்தேகத்தை கிளப்பும் டி ராஜேந்தர்!!
மேலும் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வரும் 19ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்தழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்தழுத்த காற்றழுத்த பகுதியாக மாறி ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.