Saturday, May 4, 2024

சேலத்தில் உயிருடன் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் மரணம் – போலீசார் விசாரணை!!

Must Read

சேலத்தில் உயிருடன் இருந்த தனது சகோதரனை இறந்து விட்டார் என்று கூறி சொந்த தம்பி சவப்பெட்டியில் வைத்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த அவரது சகோதரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

சவப்பெட்டி வாங்கிய அவலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பழைய ஹௌசிங் போர்டு பகுதியை சேந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கு 78 வயது ஆகிறது. இவர் தனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். அவரது சகோதரர் சரவணன் தனது சகோதரர் பாலசுப்ரமணியம் இறந்து விட்டார் என்று கூறி சவப்பெட்டி ஒன்றை வாங்கி வைத்துள்ளார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆனால், பாலசுப்ரமணியம் மரணம் அடையவில்லை. சவப்பெட்டியினை வாங்க வந்த ஊழியர்கள் அவர் உயிருடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சரவணனிடம் விசாரித்து உள்ளனர். அவர் தனது சகோதரர் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலசுப்ரமணியம் மரணம்:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சரவணன் மேல் வழக்கு பதிவு செய்தனர். பாலசுப்ரமணியத்தை மீட்டு அவரை அருகே உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.  தொடர் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்ரமணியம் இன்று பரிதாபமாக மரணம் அடைந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -