விரைவில் சிம்பு – த்ரிஷா திருமணம்?? சந்தேகத்தை கிளப்பும் டி ராஜேந்தர்!!

0

தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்களான சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு இரு வீட்டாரும் ஓகே சொல்லி விட்டதாக கூறப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இருவரது திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் எதுவும் தெரிவிக்காமல் சென்றது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

சிம்பு – த்ரிஷா திருமணம்:

நடிகை த்ரிஷாவின் திருமணம் எப்போது? என ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 37 வயதான அவருக்கு ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் சில காரணங்களால் திருமணம் ரத்தானது. இதனால் திரைத்துறையில் கவனம் செலுத்த தொடங்கிய த்ரிஷா முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. த்ரிஷா விரைவில் சிம்புவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அது குறித்து தெளிவாக த்ரிஷா விளக்கம் அளிக்கவில்லை.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

மறுபுறம் நடிகர் சிம்பு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என அவரது ரசிகர்கள் கோவில் கோவிலாக பிராத்தனை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கிலும் கூட சிம்பு, த்ரிஷா இருவரும் நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படமும் ஹிட் அடித்தது. இதனால் இருவரையும் மீண்டும் ஜோடி சேர்த்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ எடுப்பது பற்றி கவுதம் வாசுதேவ் மேனன் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு – த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் சிம்பு தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வது குறித்து செய்தியாளர்களை சந்தித்த, டி ராஜேந்தர் அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஆம் அல்லது இல்லை என்று நேராக பதிலளிப்பதற்கு பதிலாக, டி ராஜேந்திரன் எதுவும் பேசாமல் அடுத்த கேள்விக்கு சென்றார். இது மீண்டும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ‘நற்செய்தியை’ அறிவிப்பதாக நடிகர் சிம்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது அவரது திருமண செய்தியா? அல்லது புதுப்பட அப்டேட்டா? என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு ஷூட்டில் உள்ள சிம்பு அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். த்ரிஷா மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் ‘பொன்னியன் செல்வன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் பல படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here