ஷிவானி & ரமேஷை கண்ணாடி கூண்டுக்குள் அடைத்த ஹவுஸ்மேட்ஸ் – பிக்பாஸ் ரசிகர்கள் ஷாக்!!

0
bigg boss
bigg boss

பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பிக் பாஸ் முக்கியமான ஒன்று. தொடர்ந்து பல டாஸ்குகளால் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. தற்போது பிக் பாஸ் மீண்டும் ஒரு டாஸ்கை கொடுத்துள்ளது. இதனால் ஷிவானி மற்றும் ரமேஷ் கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இரண்டு நாட்களாக பல டாஸ்குகளை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்க்கு கொடுத்து வருகிறார். இதனால் ஆட்டம், பாட்டம் என கலைகட்டியது பிக் பாஸ் வீடு. இதில் அனிதா- சுரேஷ் ஜோடி சூப்பராக நடனமாடி பட்டையை கிளம்பினர். நேற்றைய எபிசோடில் ஷிவானி – பாலாஜி ஜோடியும் நன்றாக நடனமாடி பாராட்டுகளையும் பெற்றனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

bigg boss
bigg boss

மேலும் நேற்றைய எபிசோடில் VJ அர்ச்சனா 17வது போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் சுரேஷ் சக்கரவர்த்தியை கடுப்பேற்றவும் செய்தார். வந்த முதல் நாளிலேயே அனைவரையும் கலாய்த்து வீட்டையே கலகலவென மாற்றினார். அதுமட்டுமின்றி ஆஜித் எலிமினேஷனுக்கான இலவச பாஷை வைத்து ஆரி, ரமேஷ் நிஷா இடையே சில பிரச்சனைகளும் ஏற்பட்டது.

bigg boss
bigg boss

இது ஒரு புறம் இருக்க இன்று விஜய் டிவி பிக் பாஸ் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளரை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறியுள்ளார். அதனால் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானியை ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுத்துள்ளனர்.

bigg boss
bigg boss

மேலும் இவர்களை வெளியில் உள்ள கண்ணாடி அறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்த ப்ரோமோவில் ஷிவானியின் முகம் மிகவும் கோபமாக கட்டப்பட்டது. இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்குகளில் ஷிவானி மற்றும் ரமேஷ் பங்கு பெற்று வெற்றியும் பெற்றனர். மேலும் ஷிவானி பல டாஸ்குகளில் ஆக்டிவாக தான் இருந்தார்.

bigg boss
bigg boss

இப்படி இருக்கையில் அவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமன்ட் பக்கத்தில் பலரும் இதற்கு எதிராக பேசி வருகின்றனர். நாளுக்கு நாள் ஷிவானிக்கு ஆதரவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றே சொல்லலாம். ரியோவின் சில செயல்களும் மக்களை சற்று கடுப்பாக்கியுள்ளது. இந்த வார எலிமினேஷனில் கண்டிப்பாக ரேகா அல்லது சனம் ஷெட்டி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here