வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆகையால் தமிழகத்தில் வரும் டிச. 2,3,4 ஆகிய தேதிகளில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புகள் அமைவதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
வானிலை அறிக்கை:
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான சில மாற்றங்களால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அடுத்து வரப்போகும் டிச.2,3,4 ஆகிய மூன்று நாட்களில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் “ரெட் அலெர்ட்”
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிய காரணத்தினால் தென் தமிழகம் மற்றும் தென் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற இருப்பதால் தமிழகத்தில் அடுத்த டிச..2,3,4 ஆகிய மூன்று நாட்களில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கக்கடலில் புயல் சின்னம் மையம் கொண்டு இருப்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.