அனைவர்க்கும் ஜூசியான சர்பத் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், நாம் கடையில் வாங்கும் சர்பத் உடலுக்கு உகந்ததா என்றால் சந்தேகம் தான். அதனால், வீட்டில் சத்தான மற்றும் டெல்லியில் ஸ்பெஷல் ஆக தயார் செய்யப்படும் “மொஹாபாத் கா சர்பத்” செய்முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- தர்பூசணி – 2 சீலைஸ்
- பால் – 500 மில்லி (நன்றாக குளிரூட்ட பட்ட)
- ரோஸ் சிரப் – 1 ஸ்பூன்
- பொடித்த சர்க்கரை – 2 ஸ்பூன்
செய்முறை:
- முழு கொழுப்பு உள்ள பால் இருந்தால் சிறப்பு. அந்த பாலை நன்றாக குளிரூட்டி வைத்து கொள்ளவும்.
- பாலுடன் பொடித்த சர்க்கரை, ரோஸ் சிரப் சேர்த்து கொள்ளவும்.
- எடுத்துக்கொண்ட தர்பூசணி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொண்டு இந்த கலவையுடன் சேர்க்கவும்.
- வேண்டும் என்றால் ஐஸ் கட்டியை சேர்த்து கொள்ளலாம்.
பயன்கள்:
முழு கொழுப்பு உள்ள பால் இதனில் பயன் படுத்துவதால் நம் எலும்புகளுக்கு சக்தி கிடைக்கிறது. தர்பூசணி உங்கள் உடலில் நீர்ச்சத்தை கூடுகிறது. கண்களுக்கு குளிர்ச்சி வழங்குவதாகவும் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு நல்லது. உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது தர்பூசணி அது கேன்சர் போன்ற கொடிய நோய்களை கூட வர விடாமல் தடுக்கிறது. இந்த சர்பத்தை குழந்தைகள் முதல் அனைவரும் விரும்புவர்.