தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் தேமுதிக கட்சிக்கு தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் தற்போது அனைத்து கட்சிகளும் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் வருகிற 12ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளது. இதனால் தற்போது அரசியல் களமே சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக மற்றும் தேமுதிக இடையே சுமுகமான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். தற்போது தேமுதிக கட்சி தனித்து போட்டியிடவுள்ளதா அல்லது வேறு எந்த கட்சியுடன் கூட்டணியில் சேரவுள்ளதா என்பது பற்றிய தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – மார்ச் 15 வரை மாநிலங்களை ஒத்திவைப்பு!!
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அனைத்து கட்சிகளுக்கும் சின்னத்தை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தேமுதிக கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடுவதற்கு முரசு சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.