இயக்குனர் விக்னேஷ் சிவனின் புதிய படமான “காத்துவக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதன் முதலாக, நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஒன்றாக நடிக்கும் படம் இது தான்.
“காத்துவக்குல ரெண்டு காதல்” படம்:
தமிழ் திரையுலகில் எதார்த்தமான திரைக்கதைகளுடன் கூடிய திரைப்படங்களை மக்களுக்கு அளித்தவர், இயக்குனர் விக்னேஷ் சிவன். இதுவரைசிலை படங்களே இயக்கியுள்ள அவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பெயர் பெற்ற இயக்குனராக மாறிவிட்டார். அவர் தற்போது “காத்துவக்குல ரெண்டு காதல்” என்ற படத்தை இயக்கவுள்ளார். அவரது ஆஸ்தான நடிகர்களான நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது ஹைதராத்பாதில் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் நடிகை சமந்தா நடிக்குள்ளதாக செய்திகள் வெளி வந்தன. அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது விக்னேஷ் சிவன் ஒரு விடீயோவினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் நடிகை சமந்தா மேக் அப் செய்து கொள்கிறார். பின், விக்னேஷ் சிவன் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்கிறார். சமந்தா அவரிடம் விரைவில் ஷூட்டிங் முடிந்து விடுமா? என்று கேட்கையில் விக்னேஷ் சரி அப்போது 10 நிமிடங்களில் கிளம்பி வாருங்கள்” என்று நகைச்சுவையுடன் தெரிவிக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக கருதப்படும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் ஒன்றாக இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
அரியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சென்னை பல்கலை வெளியீடு!!
நயன்தாரா தற்போது “அண்ணாத்த” படத்திற்கான ஷூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார். அந்த படத்திற்கான ஷூட்டிங்கும் ஹைதராபாதில் தான் நடைபெற்று வருகின்றது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவருக்கும் எப்படியான கதாபாத்திரங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.