பாரதிக்கும், ஹேமாவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க திட்டமிடும் வெண்பா – உண்மை தெரியவருமா??? அனல் பறக்கும் கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக 8 வருடங்களுக்கு பிறகு கதைக்களம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பாரதியிடம் இருக்கும் குழந்தை வெண்பாவின் மீது வெறுப்பாகவே உள்ளது. ண்பாவிற்கு ஹேமா கண்ணம்மாவின் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

பாரதி கண்ணம்மா

முந்தைய எபிசோடில் கண்ணம்மாவின் குழந்தை என்றே தெரியாமல் பாரதியும் அவரின் குடும்பதிற்கும் அவளின் மீது ஒரு பாசம் எழுந்தது. ஆனாலும் ஹேமாவிற்கும் சௌந்தர்ய லட்சுமிக்கும் ஒத்து போகாதது போல காட்டுகின்றனர். ஆனாலும் ஹேமா கண்ணம்மாவை போலவே குணமாக உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சௌந்தர்ய லட்சுமி சௌந்தர்யா போலவே தைரியமாக உள்ளார். மேலும் ஹேமாவிற்கு வெண்பாவை சுத்தமாக பிடிக்கவும் இல்லை. இன்றைய எபிசோடில் வெண்பாவை பார்த்து திரும்பி கொண்ட ஹேமாவை பார்த்து வெண்பாவிற்கு கோவம் வருகிறது.

மேலும் அவளின் நடவடிக்கை அனைத்தையும் பார்த்து இது கண்ணம்மாவின் குழந்தை போல உள்ளதே என்ற சந்தேகமும் வருகிறது. அதுவும் கண்ணம்மாவை போலவே கறுப்பாகவே உள்ளதே என்று மேலும் பல சந்தேகங்களை எழுப்புகிறார். கடைசியாக ஹேமாவிற்கும் பாரதிக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட வேண்டும் என்று கூறுகிறார்.

கண்ணம்மாவின் குழந்தை தான் என்று தெரிந்தால் கண்டிப்பாக கொன்று விட வேண்டும் என்று திட்டமிடுகிறார். மேலும் அகிலனுக்கும், அஞ்சலிக்கும் குழந்தை இல்லை என்பதை நினைத்து கவலைபடுகின்றனர். அகிலனும் அஞ்சலியை சமாதானம் படுத்துகிறார்.

இந்நிலையில் கண்ணம்மா தூங்கிக்கொண்டிருக்க அங்கிருந்து சௌந்தர்ய லட்சுமி அவளின் பாட்டி சௌந்தர்யாவை போலவே சேலை அணிந்து வேகமாக எழுந்து வேலையை செய்யும்படி மிரட்டுகிறார். தன் அத்தையை போலவே இருப்பதை பார்த்து பூரிப்படைகிறார்.

அவரிடம் விளையாடிக்கொண்டே தேதியை கிழிக்க கண்ணம்மாவின் பிறந்த நாள் நியாபகத்திற்கு வருகிறது. இதனால் இன்றைய நாளையும் சேர்த்து கிழித்து போடுகிறார்.

டிச.19 முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள்!!

என்ன என்று ஹேமா கேட்க தனக்கு பிடிக்காது என்று கண்ணம்மா செய்ததை மனதில் நினைத்து கொள்கிறார். அப்பொழுது சௌந்தர்யா அங்கு வர பாரதியின் ரியாக்சனை வைத்தே இன்று கண்ணம்மாவின் பிறந்த நாள் என்பதை கண்டறிகிறார். மேலும் கண்ணம்மாவின் மேல் உனக்கு அன்பு இருப்பதாகவும் அதனை வெளிப்படுத்த மறைக்கிறாய் என்றும் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here