கொரோனா வைரஸிற்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பீங்க..? கதறும் உலக நாடுகள்..!

0

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகளைச் சேர்ந்த ஆராச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸானது இந்தியா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்த தொடங்கி உள்ளது.

3000 பேர் பலி..!

சீனாவின் ஹவான் நகரில் உள்ள ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் சீனாவில் மட்டும் இதுவரை 3000 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 89,000 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உலகில் இதுவரை 47 நாடுகளுக்கு இது பரவியுள்ளது உறுதியாகி உள்ளது.

எப்போது தடுப்பு மருந்து..?

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில் வரும் ஏப்ரல் இறுதிக்குள் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சீனாவைச் சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் இணை அமைச்சர் ஜூநான்பிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பையோடெக் நிறுவனம் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

அச்சத்தில் அமெரிக்கா, இந்தியா..!

இந்தியாவின் தட்பவெட்ப நிலையால் வைரஸ் பரவுவது அவ்வளவு எளிதல்ல என கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் அமெரிக்காவிலும் இதுவரை கொரோனா வைரஸினால் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இத்தாலியில் 1700 பேரும், தென் கொரியாவில் 4000 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதால் தற்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டுபுடிக்கும் முயற்சி தீவிரமடைந்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here