தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் சரிசமமாக தான் உள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு பரவலாக எல்லா மாவட்டங்களில் இருந்து வந்தது. தமிழகத்தில் தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர், அதில் 1.80 லட்சத்திற்கும் அதிகமானோர் நலமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
நேற்று மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதற்கு நேர்மாறாக, கொரோனா பதித்து சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 5, 778 பேர் குணமாகி வீடு திரும்பினர்.
தொற்று பாதிப்பு:
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், 5 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிழந்தோர் எண்ணிக்கை 100 என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த ஜூலை மாதத்தில் 14 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வங்கிகள் கடன் தர மறுத்தால் நடவடிக்கை – நிர்மலா சீதாராமன் அதிரடி!!
அதில், 1.51 லட்சம் பேருக்கு கொரோனா இருந்தது, இதில், 1.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் இருந்து என்னதான் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் சரிசமமாக தான் உள்ளது.