பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தினமும் ஒரு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. தற்போது பிக் பாஸில் கலந்து கொள்ள இருந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மற்ற போட்டியாளர்களுக்கு எந்த தொற்றும் ஏற்படாத வண்ணம் அவர்களை ஹோட்டலில் தனிமைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 4 காக பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். மேலும் இந்த சீசன் ஜூன் மாதத்திலேயே தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த சீசன் ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டது. வழக்கம் போல கமல் தான் இருந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த சீசனில் கலந்துகொள்ளும் பல பிரபலங்களில் பெயர் வெளிவந்தது. ஆனால் அதற்கு சிலர் பகிரங்கமாக மறுப்பு தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து இதில் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியனின் பெயர் வெளிவந்தது. அவர்கள் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்க வில்லை. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்த 2 போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அவர்களுக்கு பதில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தற்போது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவைகள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டது மாதிரி உள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் போட்டியாளர்களின் பெயர் மாறலாம்.