ரூ.39 ஆயிரத்திற்கு கீழே சென்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

0

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்திற்கும் மேல் சென்றது. வரலாறு காணாத இந்த விலை உயர்வுக்கு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்ததே முக்கிய காரணம் என தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா பரவல் இன்னும் முடியாத காரணத்தால் பொருளதாக மந்தநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே விலை சரிந்து வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Gold Purchase
Gold Purchase

குறைந்த பட்ஜெட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை ஊரடங்கு சமயத்தில் திட்டமிட்டு இருந்தவர்களுக்கும் தங்க நகை விலை பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தற்போது விலை குறைந்து வருவது சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடன் தவணை (EMI) செலுத்த ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் – யார் யாருக்கு பொருந்தும்??

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,810-க்கும், ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 38,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சவரன் 39 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.40 குறைந்து 62.90 ரூபாயாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here