Thursday, May 9, 2024

இனி சிம் இல்லாமல் போன் பேசலாம் – பிஎஸ்என்எல் புதிய திட்டம் அறிமுகம் !!

Must Read

இனி சிம் இல்லாமல் நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் wifi மற்றும் ப்ரொட்பண்ட் வசதியுடன் பேசலாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிஎஸ்என்எல் :

மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனம் தான் பிஎஸ்என்எல். தற்போது இந்த நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு உதவி புரியும் வகையில் புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், சிம் கார்டு இல்லாமலேயே இணையம் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதி. இதற்கு பிஎஸ்என்எல் பிராட்பாண்ட் அல்லது wifi வசதி இருந்தாலே போதும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நாம் தொடர்பு கொள்ளலாம். இதனை பிஎஸ்என்எல் விங்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மொபைல் நெட்ஒர்க் கவேரேஜ் இல்லாத பகுதிகளில் இது பயன்படும். மேலும் முக்கியமாக பிஎஸ்என்எல் தொலைபேசி பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது பிஎஸ்என்எல் விங்ஸ் நிறுவனத்தின் கீழ் ஒரு திட்டம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூபாய் 1,099 மட்டும். இந்த திட்டமானது ஒரு மாதத்திற்கு 1800 நிமிடங்கள் நாம் பேசலாம். மாதத்திற்கான லிமிட் முடிந்து விட்டால் அதற்கு மேல் பேசும் ஒவ்வொரு நிமிடத்திற்கு 30 பைசா செலவாகும். மேலும் அது வெளிநாட்டு தொடர்பாக இருந்தால் நிமிடத்திற்கு 1.12 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் சர்வதேச அழைப்புகளை பெறுவதற்கு நீங்கள் ISD யை ரூபாய் 2000 டெபாசிட் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -