மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம், ஆனால் அந்த மனைவியை போற்றும் ஆண் இருப்பது, இறைவனால் கூட கொடுக்கப்படாத வரம்.
கிராபிரவேச விழா:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் மூர்த்தி. இவர் ஒரு தொழில் அதிபர். இவருக்கு இரு பெண்குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தனது புது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்களை அழைத்துள்ளார்.
அப்போது, அவரது வீட்டிற்கு சென்ற அனைவரும் வாயடைத்து போயுள்ளனர். காரணம், அவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தன் மனைவியை அச்சுஅசலாக மெழுகு சிலையாக வடித்துள்ளார். இது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவரது மனைவி எப்படி இறந்தார்??
கடந்த இரு வருடங்களுக்கு முன் அவரது மனைவி மாதவி, தனது மகள்களுடன் திருப்பதிக்கு காரில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக எதிரில் ஒரு டிரக் வந்துள்ளது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் பிரேக் பிடிக்க முடியாமல் போக , கார் டிரக்யில் மோதியுள்ளது.
இதனால, சம்பவ இடத்திலேயே மாதவி இறந்துள்ளார், அவரது மகள்கள் சிறு சிறு காயங்களோடு தப்பித்து உள்ளனர். மாதவியின் இழப்பு மொத்த குடும்பத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கத்தின் விலை – இன்று சவரனுக்கு 408 ரூபாய் குறைவு!!
அப்போதே ஸ்ரீனிவாஸ் தனது மனைவிக்காக ஏதேனும் விசேஷமாக செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார், அதுவும் அவரை நினைவு கூறும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நினைத்துள்ளார்.
இதனால், ஒரு வீடு கட்டி அதில் இவரது சிலையை முன்னறையில் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதனால், பிரபலமான கட்டட பொறியாளர் மகேஷ் அவர்களை அணுகி உள்ளார். அவர் கடந்த ஒரு வருடங்களாக இந்த வேலையை செவ்வனே செய்து முடித்துள்ளார், மகேஷ்.
ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இது குறித்து ஸ்ரீனிவாஸ் கூறுகையில் ” ஒரு பங்களா கட்ட வேண்டும் என்பது எனது மனைவின் கடைசி ஆசை. அதனை என்னால் நிறைவேற்ற முடியாமல் பொய் கூடாது என்பதற்காக தான் இதனை செய்தேன். வீட்டிற்கு வந்த அனைவரும் அது எனது மனைவி தான் என்று ஒரு நொடி நினைத்து விட்டனர். நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.”