இந்தியாவில் முதல் முதலாக கழுதை பண்ணை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது, இந்த கழுதை பால் லிட்டர்க்கு 7000 ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
கழுதை பண்ணை:
கழுதை மற்றும் குதிரைகளை பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையம் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் பகுதில் என்.ஆர்.சி.இ என்ற பெயரில் உள்ளது. அதில் கழுதைகள் மற்றும் குதிரைகளை பற்றி ஆராய்ச்சி செய்வர். அவரகள் தற்போது நாட்டில் முதல் கழுதை பண்ணையை திறக்க உள்ளனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதில் ” ஹிலாரி” எனப்படும் கழுத்தை இனத்தை வளர்க்க உள்ளனர். அந்த இனத்தின் மூலமாக பால் கிடைக்க வழிவகை செய்ய உள்ளனர். இந்த இனத்தின் பால் ஒரு லிட்டர்க்கு ரூபாய் 7000 க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இவ்வளவு விலை?
இந்த இனத்தின் மூலமாக கிடைக்கும் பாலில் நிறைய மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் இருப்பதால் தான் இதற்கு இவ்வளவு விலை நிர்ணயித்து உள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பசு மாட்டின் பால் அல்லது எருமை மாட்டின் பால் சில நேரங்களில் ஒத்துக்கொள்ளாது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
ஆனால், இந்த பால் எல்லா குழந்தைகளுக்கும் ஒத்துக்கொள்ளும். ஒவ்வாமை போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தாது. இந்த பால் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. புற்று நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
இந்த அளவு மருத்துவ குணங்கள் இதற்கு இருக்கிறது. இந்த பாலை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவர்.