தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை குறைந்து உள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருந்த விலை தற்போது சிறிது சிறிதாக குறைய தொடங்கி உள்ளது.
இன்றைய விலை:
பொதுமக்களை கொரோனா தாகத்திற்கு ஈடாக பாதித்து வருவது விலைவாசி உயர்வு. ஆம், நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைப் போன்று, பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பால் தொழிற்சாலைகள் இயங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதால் சிறிது சிறிதாக உற்பத்தி அதிகரித்து வருகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், மறுபுறம் முதலீட்டாளர்கள் கவனம் முழுவதும் தங்கத்தின் மீது தான் உள்ளது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாத போதிலும் அதன் விலை அதிகரித்தற்கு, முதலீடுகள் கூடியதே காரணம் ஆகும். இந்நிலையில் இன்றுடன் தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை குறைந்து உள்ளது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 123 ரூபாய் குறைந்து ரூ.5,242-க்கும், ஒரு சவரன் ரூ. 984 குறைந்து 41,936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் வெள்ளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 காசு குறைந்து ரூ.82.80க்கு விற்பனை ஆகிறது.