கதவு கைபிடிகளில், கண்ணாடிகளில்,எஃகு இரும்புகளில் பூசினால் கொரோனா நோய் தொற்றிற்கான கிருமி SARS-CoV-2 ஐ ஒரு மணி நேரத்தில் மேற்பரப்பு பூச்சை ஆராச்சியாளர்கள் புதியதாக கண்டு பிடித்துள்ளனர்.
99.9% கிருமிகளை கொன்றது:
ACS பயன்பாட்டு பொருட்கள் மற்றும் இடைமுகங்கள் ஜர்னல் ஒன்றில் வெயிட்ட அராய்ச்சியின் படி இந்த பூச்சினை கண்ணாடி அல்லது எஃகு இரும்புகளில் பூசினால், பூச்சு பூசாத மேற்பரப்பை காட்டிலும் 99.9 சதவீத கிருமிகளை ஒரு மணி நேரத்தில் கொன்றதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நடுவரால் கிராமத்துக்கு கிடைத்த செல்போன் நெட்ஒர்க் – ஹீரோவாக கொண்டாடும் மக்கள்..!
இதுவரை ஒரு மணி நேரத்தில் கிருமியை கொல்லவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இன்னும் குறைந்த நேரத்தில் கிருமியை அளிப்பதற்கும் ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற உள்ளது.
வெற்றி பெற்றால்..?
இந்த பூச்சு தண்ணீர் பட்டாலும் அதன் தன்மை மாறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ரேசர் பிளேடு போன்ற கூர் பொருட்களிலும் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது, இந்த பூச்சின் பெரும் உற்பத்திக்கு பண உதவி வேண்டி கருத்துக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சி தொடர்ந்து வெற்றி பெற்றால், கொரோனா நோய் தடுப்பில் மாபெரும் கண்டுபிடிப்பு ஆகும்.
இருப்பினும் முககவசம், கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி அவசியம்:
இந்த பூச்சு மேற்பரப்பில் உள்ள கிருமிகளை மட்டுமே கொல்லும். அதாவது, இந்த பூச்சை பூசினால் நாம் தொடும் பொருட்கள் மூலம் மட்டுமே பரவாது.
ஆகையால் இந்த ஆராய்ச்சி வெற்றி பெறினும், முக கவசம் அணிதல், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் நபர்களுக்கு இடையில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.