நிலவின் இரவில் “சந்திரயான் 3” என்னாச்சு., இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!!!

0
நிலவின் இரவில்
நிலவின் இரவில் "சந்திரயான் 3" என்னாச்சு., இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!!!

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்ய “சந்திரயான் 3” விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அன்று பகல் ஆரம்பித்த நாள் என்பதால், லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர், அடுத்த 14 நாட்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பல்வேறு தகவல்களை இஸ்ரோ மையத்திற்கு அனுப்பியது. பின்பு இரவு நேரம் துவங்கியதால், அதீத உறைபனியில் ரோவர் உபகரணங்கள் பாதிப்படைந்து விடும் என்பதற்காக மீண்டும் விக்ரம் லேண்டருக்குள் அனுப்பி உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 22) நிலவில் சூரிய உதயம் ஆரம்பித்ததால், லேண்டரையும், ரோவரையும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எந்தவித சிக்னலும் கிடைக்க பெற முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து தொடர்ந்து லேண்டரை எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

இனி விபத்தில் உயிரிழப்பை கட்டுப்படுத்த மொபைல் ஆப் போதும்., புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here