தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிகள் காவிரி நீரையும், மழை நீரையும் நம்பியே விதைக்கப்படுகிறது. நடப்பாண்டில் மழைப்பொழிவு குறைவாக பெய்ததால், காவிரி நீர் திறந்துவிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் திருவாரூர். தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள குறுவை பயிர்கள் பெருமளவு கருகி பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 23) சம்பா பயிருக்கு மட்டும் இழப்பீடு தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், “பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குருவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 வழங்க வேண்டும்” என தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிலவின் இரவில் “சந்திரயான் 3” என்னாச்சு., இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!!!