இன்றைய நவீன சமுதாயத்தில் போக்குவரத்து என்பது ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது ஆண் மற்றும் பெண்கள் என இருவரும் தங்களின் வேலைகளை மேற்கொள்ள தனியாகவோ இல்லை பொது பேருந்துகளையோ பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிக நெருசல்கள் ஏற்படும் பட்சத்தில் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்படி இருக்கையில் நேற்று சென்னை கிண்டி சாலையில் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் கூட்டம் நடந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் கலந்து கொண்ட அமைச்சர் வேலு பேசியதாவது, விபத்துகளை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்க புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளோம். மேலும் சாலையில் பராமரிப்பு பணி மேற்கொண்டு, வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி, தேவையான அறிவிப்பு பலகைகளை வைத்து விபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதோடு சாலைகளில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை அடைக்க வேண்டும். மேலும் இந்த நடவடிக்கைகளை எல்லாம் அக்டோபர் மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.