தமிழ்நாடு மாநிலமானது, உடல் உறுப்பு தானத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மறு வாழ்வளிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம், குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு அடைந்த துயரச் சூழ்நிலையில், உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்கள் தான்.
Enewz Tamil WhatsApp Channel
இவ்வாறு, இறப்பதற்கு முன்னரே உடல் உறுப்பு தானம் வழங்குவோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வழங்கி உள்ளார். அதாவது, தம் உறுப்புகளை தந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றிட, உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
நிபா வைரஸ் தொற்று பாதிப்பின் தற்போதைய நிலை.., சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!