இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இயற்கை பேரிடர், வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக ” INSAT-3DS” என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். இதன் பணி முழுமையாக முடிவு பெற்றுள்ளதால், செயற்கைகோளை சுமந்து செல்ல GSLV-F14 ராக்கெட், 2274 கிலோ எடையாக தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (பிப்.,17) மாலை 5:30 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளது. எரிபொருள் கண்காணிப்பு உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் முடிக்கப்பட்டு இன்று (பிப்.16) கவுன்டவுன் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அஜித் 63 படத்தின் தரமான அப்டேட்.., ஜோடி சேரப்போகும் நடிகை இவர்தான்!!