தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, ஆர் ஆர் ஆர் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கி வந்த இவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்க தொடங்கினார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்த படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் செந்தில் குமார்.
இப்போது இவரது மனைவி குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செந்தில்குமார் கடந்த 2009 ஆம் ஆண்டு ரூஹி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த பெண் யோகா பயிற்சியாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் சில நோய் பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.