புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

0

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்களுடன் மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசு முடிவு..!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை நிறைவடைகிறது. அதேநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1.35 லட்சம் பேர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை..!

இதுவரை 273 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு நீடிக்கப்படுமா..?

இதுகுறித்து அண்மையில் பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் ஆகியோருடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த 21 நாட்களைப் போல இல்லாமல் கொரோனா தொற்று நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகளுடனும் குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஊரடங்கின் போது 12 வகையான தொழில்களுக்கு அனுமதி – பொருளாதாரத்தை உயர்த்த திட்டம்..!

To Subscribe Youtube ChannelClick Here
To Join WhatsApp GroupClick Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here