இந்தியாவில் ஊரடங்கின் போது 12 வகையான தொழில்களுக்கு அனுமதி – பொருளாதாரத்தை உயர்த்த திட்டம்..!

0
Modi
Modi

நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் வகையில் சில தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு பரிசீலனை..!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் மத்தியில் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கவும் சிறிய தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் தரும் வகையிலும் சில பரிந்துரைகளை தொழில்துறையினர் மத்திய அரசிடம் அறிவுறுத்தினர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தொழில் மேம்பாடு குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மோடி விளக்கம்..!

இந்தியா முழுவதும் 161 மாவட்டங்களில் பல லட்சம் பேர் பயன் பெரும் வகையில் 12 வகையான தொழில்கள் அனுமதிக்கப்படத்தக்கவையாக உள்ளன. பிரதமர் மோடி இதுகுறித்து உயிரும் முக்கியம் தேசத்தின் எதிர்கால நலனும் முக்கியம் என்று குறிப்பிட்டதும் இதனை கருத்தில் கொண்டுதான் அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

இந்த தொழிகளுக்கான அனுமதி வழங்கும் பட்சத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here