கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது ஆனால் தமிழகத்தில் ஊரடங்கை மீறும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்
தமிழகத்தில் 1.35 லட்சம் பேர் கைது:
ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் கூட காவல்துறை தடை விதித்துள்ளது.ஆனால் அந்த உத்தரவை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்,இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை மொத்தம் 1,25,708 வழக்குகளைப் பதிவு செய்து 1,35,734 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
வாகனங்களுக்கு அபராதம் & பறிமுதல் :
ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.45,13,544 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 469 இரு சக்கர வாகனங்கள், 28 காா்கள், 2 கனரக வாகனங்கள், 46 இதர வாகனங்கள் என மொத்தம் 545 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |