இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி உடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் தொடர்நது வெளியாகிய வண்ணம் உள்ளன.
பஞ்சாப்பில் நீட்டிப்பு:
இந்தியாவில் ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நாட்டில் முதன் முறையாக ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் மே மாதம் வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலமும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு விடை தெரிய வரும் என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |