Friday, April 26, 2024

தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வானிலை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், அடுத்து வரும் 4 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமான வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரஜினி, கமலை அடிக்கிற அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வரக் கூடாது’ – சர்ச்சையை கிளப்பிய சீமான்!!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தில் மழை அளவு பதிவாகவில்லை. அதே போல் வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அரபிக் கடலில் இன்று (23/12/2020) மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீனவர்கள் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஷால் நடித்த “ரத்னம்” படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் விஷால். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ரத்னம். முதல் ஷோ பார்த்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -