சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரை பற்றிய தவறான பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டுள்ளது. அதாவது அவர் வாங்கிய ஆடி காரும், சொகுசு பங்களாவும் ஒரு விஐபி மகனால் கிடைத்தது என்று திடுக்கிடும் செய்தி ஒன்றை சித்ராவின் தோழி கூறியுள்ளார்.
சித்ரா தற்கொலை
சின்னத்திரை நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன்பு பிரபல நட்சத்திர விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து பல மர்மங்கள் சித்ரா கொலை வழக்கில் வெளிவருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதாவது சித்ரா இறந்ததையடுத்து தற்போது ஹேமந்த் தான் அவரை டார்ச்சர் செய்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மனா உளைச்சலால் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தரப்பில் இருந்து செய்திகள் வந்தது. இதனால் ஹேமந்த்தை கைது செய்தனர்.
தற்போது ஹேமந்த்தின் தந்தை சித்ரா ஏற்கனவே 3 பேரை காதலித்து வந்ததாகவும் அவர்களுடன் டேட்டிங் செய்ததாகவும் அவர்கள் தான் சித்ராவை மிரட்டியுள்ளார்கள் என்றும் அதனால் தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் வழக்கு தொடர்ந்தார். ‘யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்கிறீர்கள்’ என்றும் பேட்டியில் கூறியிருந்தார்.
புதிய முல்லையை அறிமுகப்படுத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – கண்கலங்கிய ரசிகர்கள்!!
இந்நிலையில் சித்ரா ஆடி காரும், சொகுசு பங்களாவும் வாங்கியது எப்படி? என்ற தகவலையும் சித்ரா தோழி கங்கா பாணி கூறியுள்ளார். அதாவது விஐபி மகனுக்கு சித்ரா மீது ஒரு கண் இருந்ததாகவும், அந்த செல்வாக்கை வைத்து தான் சித்ரா கார் மற்றும் பங்களாவை வாங்கியதாகவும் சொல்லியிருக்கிறார். இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இதனை சித்ராவின் அம்மா விஜயா மறுத்துள்ளார்.