தமிழக சட்டமன்ற தேர்தல் – கேப்டன் ஆசியுடன் களமிறங்கும் விஜயபிரபாகரன்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தனது விருப்பமனுவை அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு நாள் மிகவும் குறைவாக உள்ளதால் அனைத்து கட்சிகளும் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் தேமுதிக கட்சியும் தனது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி குறித்து மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இந்த தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி குறித்து எந்த முடிவும் தெரிவிக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தொகுதி பங்கீடு குறித்தும் எந்த தகவலும் வரவில்லை. தேமுதிக கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விரும்புவதாகவும் ஆனால் அதிமுக கட்சி 14 தொகுதிகளை ஒதுக்குவதற்கு தயாராக இருப்பது போல் தெரிகிறது. எனவே இதுகுறித்து விரைவில் தகவல் வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேமுதிக கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு தொண்டர்கள் விருப்பமனுவை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருப்பமனுவை அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களின் பட்டியல் – மார்ச் 10இல் வெளியீடு!!

மேலும் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை குறிப்பிடாமல் மனுவை தாக்கல் செய்துள்ளார். விருப்பமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பு கேப்டனிடம் சென்று ஆசி பெற்றுள்ளார். அப்போது விஜயகாந்த் ‘சென்று வா வெற்றி நமதே’ என்று ஆசி வழங்கியுள்ளார். தற்போது இதுகுறித்து பேசிய விஜயபிரபாகரன் கூறியதாவது, நான் எந்த தொகுதியில் நின்றாலும் என்னை மக்கள் வெற்றி பெற செய்வார்கள். தொடர்களின் விருப்பத்திற்கேற்ப நான் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here