தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். தொடர்ந்து நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறட்சியான வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

44 வது பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் செல்வராகவன் – குவியும் வாழ்த்துக்கள்!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மழை அளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here