44 வது பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் செல்வராகவன் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

செல்வராகவன்:

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் செல்வராகவன். இவர் தனது தனி கதையம்சத்தால் பல ரசிகர்களை தன பக்கம் கட்டி வைத்தார். அதனை தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவர் என வித்யாசமான கதை களத்தை கொண்டு ரசிகர்கள் கவரும் வகையில் அசத்தலான படங்களை இயக்கி வந்தார். தற்போது ரசிகர்கள் சில ஆண்டுகளாகவே ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை கேட்டு வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வராகவன் இயக்குனராக மட்டும் இல்லாமல் கதாநாயனாகவும் களமிறங்கினார். இவர் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காயிதம் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ஓர் பெரிய நடிகருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்களோ அந்த அளவிற்கு இவரது படங்களுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள் என்றே சொல்லலாம்.

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

தற்போது இயக்குனர் செல்வராகவன் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் தங்களது வாழ்த்து மழையை அவருக்கு தெரிவித்தும் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவரது பிறந்தநாள் சிறப்பாக 4 வருடமாக காத்துக்கொண்டிருந்த இவர் இயக்கத்தில் உருவான எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் குஷி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here