Sunday, May 5, 2024

என்ன டா பண்ணி வெச்சுருக்கீங்க தளபதிய?? – போஸ்டரை பார்த்து நொந்து போன விஜய் ரசிகர்கள்!!

Must Read

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை வைத்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

அரசியலுக்கு வரவேற்பு:

தமிழ் திரையுலகில் அனைவராலும் “தளபதி” என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான், நடிகர் விஜய். அவர் இயக்குனர் சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா சந்திரசேகர் தம்பதியின் மகன். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் கடந்த 25 ஆம் தேதி தனது 20 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

அதனை அவரது ரசிகர்களும் ஒரு விழா போல ஆண்டுதோறும் கொண்டாடுவர். இந்த ஆண்டும் மக்களுக்கு உதவிகள் புரிந்தும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இப்படி அனைவரும் கொண்டாடிக்கொண்டு இருக்க, மதுரையில் உள்ள சில ரசிகர்கள் இவரது திருமணநாளை சற்று வித்யாசமாக பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியுள்ளனர்.

அப்படி என்ன இருந்தது அந்த போஸ்டரில்??

மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய்யை புரட்சி தலைவர் என்றும், அவரது மனைவி சங்கீதாவை புரட்சித்தலைவி என்றும் பெயரிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். கூடுதலாக நடிகர் விஜயை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போன்றும் அவரது மனைவியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்றும் சித்தரித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

viral poster of vijay and his wife sangeetha
viral poster of vijay and his wife sangeetha

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அனைவரது எண்ணம் மற்றும் விருப்பம். ஆனால், அவரது மனைவி சங்கீதாவும் அரசியலுக்கு வர வேண்டும் என்று இதன் மூலமாக தெரிவிக்கின்றனரோ என்று அனைவர் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

image

ஆனால், இந்த போஸ்ட்டரை சமூக வலைத்தளங்களில் பார்த்த சில விஜய் ரசிகர்கள் “என்ன டா பண்ணி வெச்சுருங்கிங்க தளபதிய??” என்ற மனநிலையில் தான் உள்ளனர். அவர்கள் இதனை பார்த்து நொந்து போய் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -