லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் கணக்கில் வராத 25,400 ரூபாயை கைப்பற்றினர். பின்பு அந்த அலுவலகத்தில் பணியாற்றிய மணி என்பவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை
மதுரையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையின் ரயில் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது மண்டல அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு எதிர்பாரத விதமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரடியாக சென்று அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அங்கு பொறுப்பு உதவி அதிகாரியாக பணியாற்றி வரும் மணி என்பவர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் கணக்கில் வராத ரூ.25,400 தொகை கைப்பற்றப்பட்டது.
தொடர் விசாரணை:
இந்த விசாரணை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது. நான்காவது மண்டல அலுவலகத்தில் பணியாற்றிய மணி என்பவர் வரி விதிப்பு போன்றவற்றில் கையெழுத்து இடுவதற்காக பலரிடம் லஞ்சம் பெற்று உள்ளதாக புகார் வந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது தொடர்பான விசாரணை வியாழக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.