தனது மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நேரலையில் கெட்ட வார்த்தைகளால் திட்டி வசைப்படியுள்ளார் வனிதா.
மன்னிப்புக் கேட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்:
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பல சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளன. மேலும் சிலர் அவர்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களை போல நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த வனிதா பேசிய வார்த்தைகள் தாங்க முடியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மன்னிப்பும் கேட்டார்.
அவதூறு வார்த்தைகள்:
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதாவை ஊடகம் ஒன்று நேரலையில் பேச அழைத்தது. அதில், அவதூறு வார்த்தைகளால் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா திட்டியுள்ளார். நீ என்ன மெட்ராஸ் ஹை கோர்ட்டா, நீ என்ன லாயரா, என்றெல்லாம் வசைப்படியுள்ளார்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பலரது வாழ்க்கையை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கெடுத்ததாகவும், மக்களிடம் பேசும் அவருக்கு வனிதாவிடம் பேச தைரியம் இல்லை என்றும் அவதூறாகப் பேசியுள்ளார்.
நாக்கூசும் வார்த்தைகள்:
நேரம் செல்ல செல்ல மிகவும் மரியாதை அற்ற வார்த்தைகளை வனிதா பயன்படுத்த தொடங்கினார். மேலும் வாடி போடி என்று சாராமரியாகப் பேசி தள்ளினார்.
ஒரு கணவர் இருப்பதினால் மட்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒழுக்கம் இல்லை எனவும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் கணவர் இவரோட குடும்பம் நடத்துவதனால் கேடு கேட்டவர் என்றும் அவதூறாக பேசியுள்ளார் வனிதா.