தாயின் கடைசி தருணத்தில், தாய்க்கு பிரியாவிடை அளிக்க, அவரது அறையின் ஜன்னலில், மகன் ஏறிய நிகழ்வு பலரது மனதை தொட்டுள்ளது.
சிகிச்சை பிரிவின் ஜன்னலில் ஏறிய மகன்:
ராஸ்மி சுவைதி, 73 வயது பெண் லுகேமியா மற்றும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஹெப்ரோன் ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தோற்று பரவாமல் இருக்க தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அங்கு ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ராஸ்மிக்கு, அவரது மகனான ஜிஹாத் ஆல் – சுவைதி, அவசர சிகிச்சை பிரிவின் ஜன்னலில் ஏறி பிரியா விடை அளித்தது அதிவேகமாக இணைய தளங்களில் பரவி அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.
அனைவரின் மனதைத் தொட்டப் படம்:
ராஸ்மி தனது மகனின் எதிர்பாராத வருகைக்கு பின், நான்கு நாட்களுக்கு முன்பு, வியாழக் கிழமை மாலை உயிரிழந்துள்ளார். மேலும், 30 வயதுடைய மகன், தனது தாய் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் ஜன்னலில் அமர்ந்துள்ளப் படம், இணையத்தில் பரவி ஆயிரக்கணக்கோர் மனதை தொட்டுள்ளது.
The son of a Palestinian woman who was infected with COVID-19 climbed up to her hospital room to sit and see his mother every night until she passed away. pic.twitter.com/31wCCNYPbs
— Mohamad Safa (@mhdksafa) July 18, 2020
ஜிஹாத், அவரது தாய் இறக்கும் நாள் வரை, தினமும் இரவு, அவரது அறை ஜன்னலில் ஏறி அமர்ந்து பார்ப்பார் என்று படத்தைப் பகிர்ந்த சஃஆ குறிப்பிட்டுள்ளார்.
தாயின் கடைசி தருணம்:
தனது தாயின் உடல்நிலை மோசமானவுடன், அவரது அறைக்கு செல்ல முயன்றதாகவும், அவரை மருத்துவமனையினர் அனுமதிக்காததால், அவ்வறையின் ஜன்னலில் ஏறியாக ஜிஹாத் கூறியுள்ளார். மேலும், அவசர சிகிச்சை பிரிவு ஜன்னலின் வெளியே உதவியற்ற நிலையில் தனது தாயின் கடைசி நிமிடங்களை பார்த்ததாக பகிர்ந்துள்ளார்.