Friday, May 10, 2024

“நிவர்” புயல் எதிரொலி – டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!!

Must Read

தமிழ்நாடு தேர்வாணையம் 28 ஆம் தேதி குரூப் 2 தேர்வுக்கான நேர்முக தேர்வுகளை “நிவர்” புயல் காரணமாக ஒத்தி வைத்துள்ளது. அதே போல் நேர்முக தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருந்த சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தேர்வாணையம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் உள்ள பணிகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் நிரப்புகிறது. தகுதி உடையவர்களை போட்டி தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கும் பணிகளை இந்த தேர்வாணையம் செய்து வருகின்றது. தேர்வாணையம் கடந்த 1938 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் போல் தமிழகத்தில் தமிழ்நாடு தேர்வாணையம் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக போட்டி தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. அதே போல் தற்போது “நிவர்” புயல் எதிரொலியாக குரூப் 2 தேர்வுகளுக்கான 3 கட்ட நேர்முக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

குரூப் 2 தேர்வுகள்:

கடந்த சில மாதங்களுக்கு முன் குரூப் 2 தேர்வுகள் தமிழக அளவில் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான 3 ஆம் கட்ட நேர்முக தேர்வுகள் வரும் 28 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், தற்போது “நிவர்” புயல் காரணமாக நேர்முக தேர்வுகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதிகளை தேர்வாணையம் பின்னர் அறிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் சி.ஏ தேர்வுகள் நடைபெற இருந்தது. ஆனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பல மாவட்டங்கள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X