கொரோனா பொது முடக்கத்தால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு முட்டை மற்றும் நாப்கின்கள் வழங்க அரசே ஒரு நாளை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம்:
கடந்த சில நாட்களாக கொரோனாவால் அனைவரும் பொது முடக்கத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு, முட்டாய் மற்றும் மாணவிகளுக்கு நாப்கின் போன்றவை வழங்கபடவில்லை என்று வழக்கறிஞர் ஆர்.சுதா பொதுநல வழக்கு ஒன்றினை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அரசு சார்பில் கூறப்பட்டது, கொரோனா பொது முடக்கத்தால் குழந்தைகளுக்கு கண்டிப்பாக முட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறியிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகிய இருவரும் கடைசி தீர்ப்பினை இன்று வழங்கினார்.
தீர்ப்பு:
இதுகுரித்து நீதிபதிகளின் தீர்ப்பு ” அரசு தான் ஒரு நாளாய் தேர்வு செய்து, குழந்தைகளுக்கு முட்டை மற்றும் நாப்கின் வழங்க வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் அல்லது மதத்தின் கடைசி நாட்கள் என்று ஏதேனும் ஒரு நாளை தேர்வு செய்து அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி!!
அது ஒன்றும் அவ்வளவு சிரமமானது இல்லை. குழந்தைகள் தான் அந்த வாங்க வேண்டும் என்று இல்லை, குழந்தைய்களின் பெற்றோர்கள் கூட வந்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால், குழந்தைகளுக்கு கண்டிப்பாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தீர்ப்பினை வழங்கி உள்ளது.