PUBG விளையாடிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவன் பலி!!

0
pubj
pubj

பப்ஜி என்னும் செல்போன் கேம் இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகவுள்ளது. பொழுதுப்போக்கான விளையாட்டு தான் என்று நினைக்கிறோம் ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் உயர்ந்து வருகின்றன.பப்ஜியை அதிக நேரமாக விளையாடிய ஆந்திராவை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் மரணம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

உயிரை வாங்கிய பப்ஜி

பப்ஜி கேமில் பலரூம் இன்று அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கேமின் மூலம் இதுபற்றியும் பல செய்திகளும் அவ்வப்போது வெளிவருகின்றன. சிலர் இந்த விளையாட்டால் மரணத்தை சந்திக்கும் நிகழ்வுகள் கூட அரங்கேறி வருகிறது.ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் முரளி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், பல மணி நேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடியுள்ளார். அப்போது விளையாட்டில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

pubj
pubj

இதனால் மிகுந்த விரக்தி அடைந்த மாணவர் சத்தம் போட்டு கத்தியாகத் தெரிகிறது. அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பப்ஜி மீதான மோகம் அவனை சாகும் நிலைக்கு தள்ளிவிட்டது. இதை தடுக்க அரசு முயற்சிகள் செய்ய வேண்டும் என ஆதங்கத்துடன் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here