தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் நிவர் மற்றும் புரவி புயல்கள் அடுத்தடுத்து தமிழகத்தை தாக்கிய நிலையில் தற்போது மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,” தென் மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும். அதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸ் ஒட்டியும் இருக்கும்.
செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட “கார்த்திக்”!!
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸ் ஒட்டியும் இருக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.